உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒன்றிய இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் வீட்டில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுசல் கிஷோரின் வீட்டில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வினய் ஸ்ரீவத்சவா, கவுஷல் கிஷோரின் மகன் விகாஸின் நண்பர் என்பதும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி விகாஸின் துப்பாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே சம்பவம் நடந்த போது விகாஸ் கிஷோர் தில்லியில் இருந்ததாகவும் கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வினய் ஸ்ரீவத்சவா மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி அவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது கொலை வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் விகாஸின் நண்பர்கள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.